2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும் இடையலான சந்திப்பொன்று திருகோணமலை உள்துறைமுக வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் செயலகத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்றது.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றி வரும் 400க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களும் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இதன்போது முன்வைக்கப்பட்டது.

தற்போது சில தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முக பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும், மேலும் சிலருக்கு நேர்முக பரீட்சைக்கான கடிதம் அனுப்பப்படாதுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைக் கேட்டறிந்த முதலமைச்சர்,  நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட மற்றும் அழைக்கப்படாது தொடர்ந்தும் சேவையாற்றி வரும் தொண்டர் ஆசிரியர்களது பெயர் பட்டியல்களை  எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  

திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இரா.ஜெயமோகன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .