2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சம்பூர் மக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

Gavitha   / 2015 மே 18 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திருகோணமலை சம்பூரில் தமது சொந்தக் காணிகளில் தம்மை குடியேற்றுமாறு கோரி, சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்றை, சம்பூர் மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

கிளிவெட்டி நலன்புரி நிலையத்திலேயே இந்த உண்ணாவிரத போராட்டம் திங்கட்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அம்மக்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும்; ஈடுபட்டிருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஷேட வர்த்தமானி அறிவித்தலின் பின்னர், தமது பழைய இடங்களுக்குச் சென்று பற்றைகளை வெட்டித் துப்புரவாக்கிக் கொண்டிருந்த மக்களை பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைக் காட்டி வெளியேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .