Gavitha / 2017 மார்ச் 13 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு மயானத்தில் உள்ள புதைகுழிகளில் ஒன்று தோண்டப்பட்டபோது, அதிலிருந்து சிசுவுக்கு அணிவிக்கின்ற மேலாடையொன்றும் உள்ளாடையொன்றும், சிறு பிள்ளைகளை போர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் போர்வையும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சந்தேகத்துக்கு இடமான அந்த புதைக்குழியை தோண்டுவதற்கான அனுமதியை, மூதூர் நீதிமன்றத்தில் பொலிஸார் கோரியிருந்தனர்.
அதற்கமைவாக, மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் அந்தப் புதைகுழி, நேற்று (13) தோண்டப்பட்டது.
இதன்போதே, மேற்படி ஆடைகள் மீட்கப்பட்டன. வேறெந்த சந்தேக பொருட்களும் அக்குழியிலிருந்து மீட்கப்படாமையால், நீதவானின் உத்தரவின் பிரகாரம், அக்குழி மீண்டும் மூடப்பட்டது.
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago