2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

திருமலை மாவட்ட மாணவன் தேசியமட்டத்தில் 3ஆம் இடம்

Thipaan   / 2014 டிசெம்பர் 29 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன்

க.பொ.த. உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் படி உயிரில் விஞ்ஞானப்பிரிவில் தேசியமட்டத்தில் 3ஆம் இடத்தையும்  தமிழ் மொழிப்பிரிவில் தேசியமட்டத்தில் 1ஆம் இடத்தையும் திருகோணமலை, உவர்மலை விவேகானந்தக் கல்லூரியின் மாணவன் சிவகுமாரன் இந்துஐன் பெற்றுள்ளார்.

2.8486 என்ற செட் புள்ளியையும், 3ஏ தரச்சித்தியையும் பெற்று மேற்படி மாணவன் இச்சாதனையை எட்டியுள்ளார்.

ஆங்கில ஆசிரியராக கடமைபுரியும் செல்வேந்திரன் சிவகுமாரன், உதவி நூலகராக பணியாற்றும் கிருபாலினி சிவகுமாரன் ஆகியோரின் 2ஆவது மகனாகிய இந்துஐன் 2011 ஆண்டு க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் தோற்றி தேசிய மட்டத்தில் 11ஆவது இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 1ஆம் இடத்தையும் பெற்றிருந்தார்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .