2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

31 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

31 இந்திய மீனவர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

இலங்கை கடற் பரப்பிற்குல் அத்துமீறி நுழைந்து மின்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்களை கடந்த மாதம் 30ஆம் திகதி  4 மீன்பிடி படகுகளுடன் முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதவான் மீனவர்களிடம் இலங்கை கடற்பரப்பிற்கு  நுழைந்து மீன்பிடித்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா என வினவினர்.

அதனை இந்திய மீனவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களுக்கு கடல் எல்லை தெரியாது என்றும் தாம் இந்திய கடற் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடரந்து குறித்த 31 பேரையும் மீண்டும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .