2025 ஜூன் 25, புதன்கிழமை

50 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீதி திறப்பு

Kogilavani   / 2014 மே 16 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா பைசல் நகரில் உள்ள கூபா நகரில் 50 இலட்சம் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதி   புதன்கிழமை (14) கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்- ஏ-மஜீத்தினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மாகாண அபிவிருத்தித் திணைக்களத்தினால் இதற்கென நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கே.அருந்தவ ராஜா , முதலமைச்சரின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தமிழ்ச்செல்வன், கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிருஷ்னேந்திரன், முதலமைச்சரின் உதவிச் செயலாளர் எம்.ராசீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .