2025 ஜூன் 25, புதன்கிழமை

7 இந்திய மீனர்வர்களுக்கும் 4 வரை விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூன் 20 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சசிக்குமார்

திருகோணமலை வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டஇந்திய மீனவர்கள் ஏழுவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் தி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை துறைமுகபொலிசாரால் இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இந்திய மீனவர்கள் எழுவரும் அவர்கள் பயணித்த ரோலர் படகுடன் வியாழக்கிழமை (19) காலை 10.0 மணியளவில் திருகோணமலை- முல்லைத்தீவு எல்லை  கடற்பரப்பில் வைத்து  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவர்கள் அன்றிரவு 10.00 மணியளவில் திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களுடைய படகு டொக்கையாட் கடற்படைத் தளத்தில் தடுத்த வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .