2025 ஜூன் 25, புதன்கிழமை

ENET கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் வைபவம்

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை திருஞான சம்பந்தர் வீதியில் அமைந்துள்ளENETகல்லூரியின் 2013ஃ2014  ஆண்டிற்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வியாழக்கிழமை (08) மாலை நடைபெற்றது.

 கல்வி அமைச்சின் Education for Knowledge Society Program (EKSP- ADB, Ministry of Education, Sri Lanka     உதவி) திட்டத்தினூடாக திருக்கோணமலை, கந்தளாய், மூதூர், கிண்ணியா , நிலாவெளி பிரதேசங்களை சேர்ந்த 150 இளைஞர்கள் Certificate in Financial Services கற்கைநெறியும் 40 ஆசிரியர்களுக்கு ICT (IPICT) கற்பிக்கப்பட்டு சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் Chartered Institute of Security and Investment-UK  நிறுவனத்தினால் வழங்கப்பட்டது. மேலும் ICT, Web Designing, Graphic Designing , Career Skills , ASAP , ICDL UK பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சி..ரகுராம்  கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந..விஜேந்திரன்  திரு. DDA தர்மகீர்த்தி மாகாண முகாமையாளர்- கிழக்கு மாகாணம் . இலங்கை மத்திய வங்கி. திருக்கோணமலை மற்றும் சிறப்பு அதிதிகளாக பாடசாலை அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.

திரு வ.கலைச்செல்வன் தலைவர் ENET College of Business & Technology (ECBT) தலைமையில் விழா நடைபெற்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .