2025 மே 15, வியாழக்கிழமை

இன்புளுவன்சா ஏ வைரஸ்; ஐவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்புளுவன்சா ஏ வைரஸ் காரணமாக, இம்மாதம் ஐவர் உயிரிழந்துள்ளனரெனவும் ஏழுவர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் அனூசியா ராஜ்மோகன், இன்று (22) தெரிவித்தார்.

காய்ச்சல் காரணமாக, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சேவைப்பிரிவுக்கு (ETU) நாளொன்றுக்கு 25 பேருக்கும் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் 47க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுச்சென்றுள்ளார்களெனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமல்லாது ஹொரவபொத்தானைப் பகுதியிலிருந்தும் நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகை தருவதாகவும் போதுமான வைத்தியர்களும் சிற்றூழியர்களும் இல்லாமையினால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .