Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைபரிச்சான் இராணுவ முகாமில் கடமை புரிந்து வந்த பிட்டதெனிய கமகே காமினி பிரேமரத்ன (வயது 42) எனும் இராணுவ வீரர், நேற்றுச் சனிக்கிழமை (06) இரவு, இராணுவ முகாமில் உயிரிழந்துள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.ஏ.நூருல்லா தெரிவித்தார்.
மாரடைப்புக் காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளதாகவும் 2 பிள்ளைகளின் தந்தையான இவர், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
38 minute ago
40 minute ago
1 hours ago