2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

இறக்கக்கண்டிப் பிரதேசத்தில் 7 மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில் 07 மீனவர்களை திருகோணமலை, இறக்கக்கண்டிப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, இந்த மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி  மீன்பிடியில் ஈடுபட்டமை தெரியவந்தது. இதனை அடுத்து இவர்களைக் கைதுசெய்துள்ளதுடன், இம்மீனவர்களிடமிருந்து டைனமைட், ஒரு படகு,   மீன்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .