2025 ஜூன் 21, சனிக்கிழமை

உணவகங்களில் சோதனை நடத்த ஏற்பாடு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 05 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                  

கந்தளாய் பொதுச் சுகாதாரப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 9ஆம் திகதி  உணவகங்கள், கடைகளில்  சோதனை மேற்கொள்ளவுள்ளதாக கந்தளாய் பொதுச் சுகாதார அதிகாரி நிமால் நிரோஷன் தெரிவித்தார்.                               

கந்தளாய் நகரம், பேராறு, பேராற்றுவெளி, ரஜஎல போன்ற பகுதிகளில் இச்சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.                    
இதன்போது சுகாதாரத்துக்கு சீர்கேடான முறையில் உணவகங்களை வைத்திருப்பது, காலாவதியான பொருட்களை வைத்திருப்பது என்பவை தொடர்பில்  கண்டுபிடிக்கப்பட்டால், உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .