2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

எரிபொருள் வரிசையில் இரண்டு மரணங்கள்

Editorial   / 2022 ஜூலை 22 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

  ஒலுமுதீன் கியாஸ் ஷாபி  

எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களில் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். பெலவத்தை மத்துகமவில் 64 வயதானவர் மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில், கிண்ணியாலிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில்  எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தவர்களில் ஒருவர், நேற்று (22) பகல் 12 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

கிண்ணியா  முனைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த  49 வயதான முஹமட் ரம்லான் சரீப்  என்பவரே  இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவர், கடந்த 24 மணித்தியாலங்களுக்கு மேலாக எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X