2025 மே 16, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் டெங்கு தீவிரம்

Gavitha   / 2017 பெப்ரவரி 27 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ் 

கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த மாஞ்சோலையைச் சேர்ந்த, ஏழுவயது சிறுவனான ஜெஸாத் ஹாதீக், நேற்று (27) உயிரிழந்தார். 

பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் சடலத்தை உறவினரிடம் கையளித்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.  டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு, திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவோரில், கடந்த மூன்று தினங்களுக்குள் இருவர் உயிரிழந்துள்ளனர்.  

டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், இதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிண்ணியா, 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 20 வயதான எம்.ஜே. இப்திசாம் என்ற யுவதி, சனிக்கிழமை(25) இரவு உயிரிழந்திருந்தார். 

இதேவேளை, கிண்ணியா பகுதியில், டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, வைத்தியசாலையில் 350 பேர் அண்மைய காலத்தில் அனுமதிக்கப்பட்டனர் என்றும், குறுகிய காலத்துக்குள் உயிரிழந்தோர் தொகை ஐந்தாக அதிகரித்துள்ளது என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .