2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்

திருகோணமலை, அபயபுர சந்தியில் வைத்து 375 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவரை, விசேட  அதிரடிப்படையினர் நேற்றிரவு (11) கைதுசெய்துள்ளதாக உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த ஏ.வீ.பீ.ஜானக்க (49 வயது) என்பவரே இவ்வாறு கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து இவரைப் பின் தொடர்ந்த விசேட அதிரடிப்படையினர் கேரள கஞ்சாவை விற்பதற்காக முனையும் போது, 375 கிராம் கஞ்சாவுடன் இவறைக் கைதுசெய்தாகவும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .