2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி முதலைமடு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி  நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் 3 பேரைக் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, கசிப்புடன் 4 பரல்களையும் கசிப்புக் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் 9 பரல்களையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இயங்குவதாக கிடைத்த தகவலை அடுத்து, இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X