2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் அரைக்கிலோகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை, இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் எச்.ஜி.தம்மிக்க, வெள்ளிக்கிழமை(12) உத்தரவிட்டார்.

கந்தளாய், லைட்வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், அவரது வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாகப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சந்தேகநபரின் வீட்டைச் சோதனை செய்தபோதே அவர் கஞ்சா வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை வியாழக்கிழமை (11) இரவு கைது செய்த பொலிஸார், அவரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை(12) ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X