2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

கடலில் மூழ்கி இளைஞர்கள் மூவர் பலி

Princiya Dixci   / 2017 ஜனவரி 23 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மூதூர், ஹபீப் நகர் கடலில் நீராடச்சென்ற இளைஞர்கள் மூவர், இன்று (23) பிற்பகல் 1.30 மணியளவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திஹாரிய கலகெடிஹேன, அலி ஜின்னா மாவத்தையைச் சேர்ந்த எம்.உகாஸ் (19 வயது) எஸ்.இக்ராம் (19 வயது) மற்றும் எம்.அப்துல்லாஹ் (16 வயது) ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

மூதூர் பிரதேசத்துக்கு ஜமாஅத் போதனைக்காக வந்திருந்த நிலையிலே​யே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X