Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதி மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொடுக்கும் காணிக் கச்சேரிக் கூட்டம், மூதூர் பிரதேச செயலகத்தில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில் இன்று (16) நடைபெற்றது.
2008/04 சுற்றுநிருபத்துக்கு அமைவாக, கிழக்கு மாகாணக் காணி ஆணையாளரின் அனுமதி கிடைக்கப்பெற்றவர்களுக்கே இக்காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. இதில் தெரிவுசெய்யப்படும் பொருத்தமான நபர்களுக்கு விரைவில் காணி ஆவணங்கள் வழங்கப்படவுள்ளன.
கிராம சேவையாளர் திருமதி கு.சுபத்திரா, காணி உத்தியோகத்தர்களான எஸ்.எல்.நௌபர், கஜகோகுலன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
47 minute ago