2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்  

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 25 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் திருக்குமரன் உத்தரவிட்டார்.

சந்தேகநபர், குறித்த சிறுமியை ஒரு வருடமாகக் காதலித்து, சிறுமியின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் மாத்தறை மாவட்டத்துக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளாரென, சிறுமியின் பெற்றோர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X