Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட குச்சவெளிப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரை, நேற்று செவ்வாய்க்கிழமை (09) மாலை கைதுசெய்துள்ளதாகக் குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி குறித்த நபர் மணல் அகழ்வில் ஈடுபடுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை, குச்சவெளி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் குச்சவெளிப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
3 hours ago