Princiya Dixci / 2017 மார்ச் 13 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியாவில் பிரதேசத்தில், டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்த்தர் ஒருவர், இன்று (13) காலை உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய, கிண்ணியாவில் பிரதேசத்தில், டெங்குக் காய்ச்சலினால் பலியானோரின் தொகை, ஒன்பதாக உயர்ந்துள்ளது. நேற்றையதினமும் இருவர் உயிரிழந்திருந்தனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, மாஞ்சோலைச்சேனை 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கட்ட மிரான் பைசல் (வயது 39) என்ற, இரண்டு பிள்ளையின் தந்தையே, இன்று உயிரிழந்துள்ளார்.
இவரது சகோதரி பாத்திமா நபீயா (வயது 36), டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், கடந்த வெள்ளிக்சிழமை (10) உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
47 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
6 hours ago
22 Dec 2025