Princiya Dixci / 2017 மார்ச் 12 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
திருகோணமலை, சுமேதங்கரபுர பகுதியில் 17 வயதுடைய சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற 22 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.ஏ.முஹீத், சனிக்கிழமை உத்தரவிட்டார்.
குறித்த சிறுமியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில், சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக, வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, உப்புவெளி பொலிஸார், குறித்த இளைஞனைக் கைதுசெய்திருந்தனர்.
சிறுமி, சட்ட வைத்தியப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025