Freelancer / 2023 பெப்ரவரி 28 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமா்
இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்வு, திருகோணமலை - சல்லி கிராமத்தில் இன்று (28) நடைபெற்றது.
இந்த மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோருடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத் தலைவர் ச.குகதாசன் மற்றும் செயலாளர் க.செல்வராஜா, பொருளாளர் வெ.சுரேஷ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தலும் பொதுமக்கள் குறைகள் மற்றும் ஐயங்களுக்கு பதிலளிக்கப்பட்டன.
அத்துடன் கிராமத்தில் உள்ள குறைபாடுகளும் பார்வையிட்டன. (N)

24 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
7 hours ago