2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மின்கம்பத்தில் காகத்தின் கூடு: பிரதேசவாசிகள் அச்சம்

Thipaan   / 2016 ஜூன் 19 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

மூதூர் பிரதேசத்திலுள்ள நொக்ஸ் வீதியின் கிழக்குப் பக்கமுள்ள மின் கம்பத்தின் மேல் பகுதியில் காகங்கள் கூடு கட்டி, தமது இருப்பிடமாக்கிக் கொண்டுள்ளன.

அந்தக் கூட்டில் வசிக்கும் காகம், வீடுகளில் உள்ள அடுப்புகளிலிருந்து தீயுடன் கூடிய சிறியசிறிய விறகு குச்சிகளையும் கொண்டு சென்று கூட்டினுள் வைப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, அருகில் குடியிருப்போர், பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் பெரும் அச்சத்துடன் இருகின்றனர்.

இதனால், மின்னொழுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் இது தொடர்பாக மின்சார சபை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .