2025 மே 16, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 11 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி யான் ஓயா சந்திக்கருகில் நேற்று (10) மாலை 6.10 மணியளவில் வேகமாக வந்து கொண்டிருந்த காருடன், மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக, ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், கஹடகஸ்திகிலிய.கேதேவ.மஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த சின்னாகே தஸநாயக்க (55 வயது) எனவும் தெரியவருகின்றது.

சடலம், ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளதாகவும் விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .