2025 மே 16, வெள்ளிக்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 25 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு மகாணசபை உறுப்பினர் மா.நடராஜா கோரிக்கை விடுத்தார்.

இந்த வருடத்துக்கான முதலாவது கிழக்கு மாகாணசபை அமர்வு இன்று (24) ஆரம்பமாகியது இதன்போது,  பிரேரணையை சமர்ப்பித்து அவர் உரையாற்றியபோதே, இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் நிலவிய வரட்சி காரணமாக விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. ; குறிப்பாக,  மேட்டுநில விவசாயிகள் பெரும் பாதிப்பை  எதிர்நோக்கியுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .