2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மாத்தறையில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் வீதி

Super User   / 2013 நவம்பர் 19 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென் மாகாணத்திலுள்ள வீதியொன்றுக்கு தமிழரொருவரின் பெயர் முதற் தடவையாக சூட்டப்பட்டுள்ளது. மாத்தறை நகரிலுள்ள வீதியொன்றுக்கே தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவரும் இலங்கை சட்டவாக்கப் பேரவையின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக பதவி வகித்தவருமான  சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு தினம் மற்றும் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டே குறித்த வீதிக்கு விசேட பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறித்த வீதியின் பெயர் சூட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அழகப்பெரும மற்றும் யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X