Editorial / 2019 செப்டெம்பர் 22 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட குறித்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதுடன், அதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா, செயற்படவுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரட்ன, மேல்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்களான நிஹால் சுனில் ராஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, அமைச்சின் ஓய்வு பெற்ற செயலாளர் எம். எம். அதிகாரி ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
24 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
54 minute ago