Mayu / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.ஜி கபில
உலகின் சிறந்த சர்வதேச சுற்றுலா சபையாக (Best International Tourism Board) இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியக விருதை (Global Tourism Awards - 2024) வென்றதன் பின்னர், சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சனிக்கிழமை (03) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

வௌ்ளிக்கழமை (02) இரவு இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்ற இவ்விழாவில் குறித்த விருது வழங்கப்பட்டது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பூஜ்ஜியத்திலிருந்து 100% வளர்ச்சியைக் காட்டியதுடன், உலகில் இலங்கையின் சுற்றுலாத் துறைக்காக ஊக்குவிப்பு நடவடிக்கையும் இங்கு மதிப்பிடப்பட்டது.
இதன் விளைவாக, இலங்கையில் இது சுற்றுலாப் பருவம் அல்ல (Off Season) கடந்த ஜூலை மாதத்தில் 187,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், இதன்படி ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை 12 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
5 minute ago
15 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
4 hours ago