2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

சிலுவையின் காலில் இருந்து வடிந்த நீர்

Editorial   / 2025 ஜனவரி 28 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவர் சிலுவையில் இருந்து செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளது 

ஆண்டவர் சிலுவையின் கால் விரல் பகுதியில் இருந்து மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் கசிந்தது

சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் ஆண்டவரின் காலில் இருந்து வழிந்தோடும் நீரை எடுத்துச் சென்றனர்.

சகோதர மதத்தினர், இராணுவத்தினர், பொலிஸார், என பலர் இந்த காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் பிடித்தனர்

சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக தகவல்களை வெளியிட முடியும் என கப்பலேந்தி மாதா ஆலய  நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .