Mayu / 2024 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
பாண்டிருப்பில் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா புதன்கிழமை (07) சிறப்பாக நடைபெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய.அநிருத்தனின் வழிகாட்டலின் கீழ் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றமும் இணைந்து பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் இவ்விழாவை நடாத்தியது.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா பாடசாலையின் அதிபர் கே.அருண்குமார் தலமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி பணிமனையின் இந்து சமய பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் ம.லக்குணம், மற்றும் புண்ணிய மலர் அம்மையார், கல்முனை வடக்கு பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி நா. ஸ்ரீபிரியா, சைவப்புலவர் வளவாளர் ஜோ.கஜேந்திரா, வளவாளர் நா.சனாதனன், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .