Freelancer / 2022 ஜனவரி 22 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று காலை ஆரம்பமானது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
(படங்கள் - வா.கிருஸ்ணா, எச்.எம்.எம்.பர்ஸான், எம் எஸ் எம் நூர்தீன்)



அம்பாறை
அம்பாறை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
(படங்கள் - வி.சுகிர்தகுமார் )

திருகோணமலை
தி/மூ / தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் இன்று சனிக்கிழமை (22) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.
(தீஷான் அஹமட்)

கொட்டகலை
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சென்றமையை காணக்கூடியதாக இருந்தது.
(எஸ்.கணேசன்)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .