R.Tharaniya / 2025 மார்ச் 20 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றில் சரணடைந்துள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குமாறும் அவருக்கு பிணை வழங்காமல் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் வியாழக்கிழமை (20) முற்பகல் 11 மணியளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனை நீர்கொழும்பு போராட்ட குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்த தோடு தேசபந்துவை சிறையில் இடு மாறும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை சரியாக மேற்கொள்ளுமாறு குரல் எழுப்பினர்.
எம்.இஸட். ஷாஜஹான்




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .