2024 மே 09, வியாழக்கிழமை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திறப்பு

Freelancer   / 2022 ஜனவரி 15 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான வீதியின் நீளம் 32 கிலோமீற்றர் எனவும், பயண நேரம் 25 நிமிடங்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மீரிகமவில் இருந்து பிரவேசித்து குருநாகல் அல்லது யக்கபிட்டியை விட்டு வெளியேறும் நான்கு சக்கர வாகனம் ஒன்றுக்கு 250 ரூபாயும், ஆறு சக்கர வாகனத்திற்கு 350 ரூபாயும், ஆறு சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனத்துக்கு 550 ரூபாயும் அறவிடப்படும் என அதிவேக நெடுஞ்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X