Janu / 2025 ஜூன் 01 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தன் பாலின உறவாளர் சமூகத்தின் உரிமைகளை கோரி ஹட்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
பல அரச சாரா அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.
ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஆரம்பமாகிய பேரணி, ஹட்டன் - டிக்கோயா நகரசபை மண்டபம் வரை வந்ததுடன் பேரணியில் இணைந்த, பல தன் பாலின உறவாளர் சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஹட்டன் நகரசபை மண்டபத்தில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தினர்.
“மலையக வானவில் பெருமிதம்” என்று பெயரிடப்பட்ட இந்த பேரணி, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தன் பாலின உறவாளர் சமூகத்தின் உரிமைகளை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக பேரணி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ






3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago