Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 05 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவீன மற்றும் சமகாலக் கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA இலங்கை) மே மாதம் 29ம் திகதி ‘முழுநிலஅமைப்பு’ கண்காட்சியினை நிறைவு செய்தது.
சந்தேவ்ஹன்டி மற்றும் தினால் சஜீவவினால் எடுத்தாளப்பட்டு, நுழைவுக்கட்டணம் அறவிடப்படாத இக் கண்காட்சியானது 2024 செப்டம்பர் மாதம் 12ம் திகதி முதல் மூன்று சுழற்சிகளாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
“‘முழுநிலஅமைப்பு’ நிறைவுறும் இவ் வேளையில், இக் கண்காட்சியானது அழகான காட்சிகள் மட்டுமன்றி போராட்டம் ஒன்றின் காப்பக நினைவாகவும் அதே நேரத்தில் சில தருணங்களில் ஒரு மனவடுவாகவும் நில அமைப்பு அமையலாம் எனும் ஒரு சிந்தனை மீளமைப்பு அமைந்துள்ளது என நினைக்கிறேன்,” எனக் குறிப்பிட்டார் ஹன்டி.
அத்துடன், “தோட்டப் பொருளாதாரம் முதல் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் இராணுவ மயமாக்கப்பட்ட காணிகள் வரையான நிலம் குறித்த அரசியலுடன் இணைத்துப் பேசாமல் இலங்கையில் கலை குறித்து எந்த ஒரு காத்திரமான வரலாறும் வரையறுக்கப்பட முடியாது என்பதைத் தெளிவு படுத்துவதே இக் கண்காட்சியின் நோக்கமாகும்,” என மேலும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் காணிகள் எவ் வண்ணம் பரந்தளவில், வியத்தகு முறையில், முரண்பாடுகளுடன் கூடிய வகையில் மாற்றமடைந்தன என ஆராய்வதாக ‘முழுநிலஅமைப்பு’ அமைந்தது. நில அமைப்பு குறித்த பாரம்பரிய விளக்கங்களுக்கும் அப்பால் படைப்புகளை உருவாக்கும் 29 சமகாலக் கலைஞர்களை ஒருங்கிணைத்தது இக் கண்காட்சி.
நிலம் குறித்த கருத்துக்களை உருவாக்கி, பேசும் வேறுபட்ட முறைகளை அவர்களது கலைப்படைப்புகள் முன்வைத்தன. நிலத்துடன் எமது தொடர்பு குறித்த மீள கலந்துரையாடலை வெளிக்கொணரும் வேறு பட்ட படைப்புத் தொடர்களை ‘முழுநிலஅமைப்பு’ முன்வைத்தது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 1ம் திகதி வரை பார்வைக்கு வைக்கப்பட்ட ‘முழுநிலஅமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 1 ஆனது
அனோமா ராஜகருணா (பி.1965), அருள்ராஜ் உலகநாதன் (பி.1992), பாபராசன்சோனி (பி.1928–2022), சந்திரகுப்த தேனுவர (பி.1960), தனுஷ் மாரசிங்க (பி.1985), டொமினிக்கன் சோனி (பி.1956), ஹனுஷா சோமசுந்தரம்(பி.1998), ஜகத் வீரசிங்க (பி.1954), ஜஸ்மின்நிலாணிஜோசஃப் (பி.1990), ஜெஸ்பநோடால் (பி.1969), ப்ரதீப்தல்வத்த (பி.1979), செபஸ்டியன் பொசின்ஜிஸ் (பி.1975), ஸ்டீபன் சாம்பியன் (பி.1959), சுந்தரம் அனோஜன் (பி.1991), தவராசா கஜேந்திரன் (பி.1987), மற்றும் திசத்தோரடெனிய (பி.1975) ஆகியோரது படைப்புகளைக் கொண்டிருந்தது.
கண்காட்சியின் சுழற்சி 2 ஆனது 2024 டிசம்பர் 15 ல் இருந்து 2025 மார்ச் 2 வரை பார்வைக்கு வைக்கப்படிருந்தது. அதில் அப்துல் ஹாலிக் அஸீஸ் (பி.1985), சந்திரகுப்த தேனுவர (பி.1960), தனுஷ் மாரசிங்க (பி.1985), டொமினிக்கன் சோனி (இ.1956), ஜாஸ்மின் நிலானி ஜோசப் (பி.1990), கோரலேகெதர புஷ்பகுமார (பி.1968), பால பொ(த்)து பிட்டிய (பி.1972), பிரதீப் தல வத்த (பி.1979), மற்றும்தா. சனாதனன் (பி.1969) ஆகியோரது படைப்புகள் காணப்பட்டன.
2025 மார்ச் 15 லிருந்து 29 வரை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ‘முழுநிலஅமைப்பு’ கண்காட்சியின் இறுதிச் சுழற்சியிலே
பந்து மனம்பெரி (பி.1972), தனுஷ் மாரசிங்க (பி.1985), தேஷாம் தென்னக்கோன் (பி.1977), இசுறு தயாரட்ண (பி.1985), லக்கி சேனநாயக்க (1937–2021), எம். விஜிதரன் (பி.1985), முஹன்னத் காதர் (பி.1966), ருவின் டி சில்வா (பி.1986), சகிலா ஆலியப்பர் (பி.1996), சுந்தரம் அனோஜன் (பி.1991) மற்றும் ரஷ்யா டிமெல் (பி.1991) ஆகியோரது படைப்புகள் வைக்கப்பட்டன.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த படைப்புகளின் சிறப்பு பற்றி ஹன்டி குறிப்பிடுகையில், “கடந்த ஏழு தசாப்தங்களாக நிலம் குறித்து உடனடியாகவும் கோத்திரமாகவும் பேசப்பட வேண்டிய விடயங்களை வெளிப்படுத்திய கலைஞர்களின் படைப்புகள் ‘முழுநிலஅமைப்பு’ கண்காட்சியில் உள்ளடக்கப்பட்ட.
அதிகாரப்பூர்வ காப்பகங்களில் இல்லாதவற்றை அவர்கள் உருவாக்கியிருந்தார்கள்,” எனத் தெரிவித்தார். “ஓர் அருங்காட்சியக மானது படைப்புகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அர்த்தமுள்ளதாக அமைய வேண்டியதேயை இது முதன்மைப்படுத்துவது. அதாவது, ஓர் உரையாடலுக்கான அடித்தளமாக அமைய வேண்டியது.
–கடப்பாடு: சடப்பொருளாக மட்டுமல்லாமல், பேசப்பட்ட நினைவாக அமைய வேண்டிய தேவை,” என அவர் மேலும் தெரிவித்தார்.
ஒன்பது பாடசாலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து MMCA இலங்கையின் நிகழ்ச்சிகளைக் காணவென 722 மாணவர்கள் ஆர்வமாகக் கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். அருங்காட்சியகத்தின் ‘முழுநிலஅமைப்பு’ கண்காட்சியில் 58 பொது நிகழ்ச்சிகள் எடுத்தாளப்பட்டுள்ளன. அவற்றில் 942 பேர் பங்கு பற்றி உள்ளார்கள். இந்நிகழ்ச்சிகளில் கலரி உரையாடல்கள், எடுத்தாளுநர்களின் உலாக்கள், கண்காட்சி உலாக்கள், பயிலரங்குகள், விசேட ஆற்றுகைகளுடன் வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையுடன் செயல்படும் SEDR உடன் MMCA இலங்கை இணைந்து முன்னெடுத்த செயற்பாடுகளும் ‘முழுநிலஅமைப்பு’ கண்காட்சியில் இடம்பெற்றன. சமுதாய அடிப்படையிலான ADR உபாயங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து புரிந்து கொள்ளும் நோக்கினைக்கொண்ட 12 மாத முயற்சியாக அமைந்த ‘Arts 4 ADR’ இணை செயல் திட்டமானது இலங்கையில் நிலவும் சமுதாய அடிப்படை பிணக்குகள், முரண்பாடுகள் மற்றும் துயரங்களுக்கு மூல காரணங்கள் குறித்த உரையாடல்களை கலை ஊடாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டமைந்த.
இம் முயற்சிகளின் ஒரு பகுதியாக, MMCA இலங்கையானது, வவுனியா, மன்னார், அம்பாறை, திருகோணமலை, பதுளை, மொனராகலை மாவட்டங்களில் இன அடிப்படையிலான முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கலைப்படைப்புகளை உருவாக்குவதற்கு கலைஞர்களான அனோமா ராஜகருணா, ஜஸ்மின் நிலானி ஜோசப், ஹனுஷா சோமசுந்தரம் ஆகியோரை நியமித்து. ‘முழுநிலஅமைப்பு’ கண்காட்சியின் சுழற்சி 1ல் காட்சிப்படுத்தப்பட்ட இப்படைப்புகள் குறிப்பிடத்தக்களவு பொது மக்களின் வரவேற்பைப் பெற்றன. அத்துடன் 2024 நவம்பர் மாதத்தில் 2025 ஜனவரியிலும் ‘Arts 4 ADR’ ஒரு பகுதியாக 15 பிராந்திய ரீதியான பயிலரங்கு களையும் MMCA இலங்கை நடாத்தியது. இதில் இலங்கையின் ஏழு மாவட்டங்களில் இருந்து 460 க்கும் அதிகமான சமூக தலைவர்கள் பங்கு பற்றினார்கள்.
MMCA இலங்கை, கல்வியை முதன்மைப்படுத்தும் ஒரு முன் முயற்சியாகும். பொதுமக்கள், பாடசாலைகள், மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் இன்பத்திற்காக, நவீன மற்றும் சமகால கலைகளின் காட்சி, ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது அருங்காட்சியகத்தை நிறுவுவதே இதன் நோக்கமாக உள்ளது. அருங்காட்சியகம், அதன் கண்காட்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை அவர்களின் இணைய தளமான www.mmca-srilanka.org இல் அல்லது முகநூலில் facebook.com/mmcasrilanka மற்றும் இன்ஸ்டகிராமில் instagram.com/mmcasrilanka/ பார்த்து அறியலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago