2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மே தின பேரணி...

R.Tharaniya   / 2025 மே 01 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத் தொழிலாளர்கள் தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (1) அன்று நாடளாவிய ரீதியில் மே தின பேரணி, கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றனர்...

கட்டுநாயக்க "பெண்கள் மையம்"அமைப்பு கூட்டணி....

யாழ்ப்பாணத்தில் மே தினம் பேரணி....

ஹட்டன் மே தின பேரணி....

ஐக்கிய மக்கள் சக்தி, அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில், தலவாக்கலையில், மேதினக் கூட்டத்தையும் பேரணியையும் நடத்தியது. அதன் பங்காளிகளான பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன் தலைமையிலான கட்சிகளின் ஆதரவாளர்கள் மே.தின பேரணியில் பங்கேற்றிருந்தனர்.

செங்கொடி தொழிற்சங்கங்கள் மே தினம் ஹட்டனில் தலைவர் செல்லையா சிவசுந்தரம் தலைமையில் இடம் பெற்றது.

சஜித் பிரேமதாச மே.தின பேரணியில் பங்கேற்றிருந்தர்.

திருக்கோவில் பிரதேச சபையின் சுயேட்சை குழு ஒன்றின் தலைவர்சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில் இடம்பெற்ற மே தின நடைபவனியானது  தம்பிலுவில் முனையூர் சந்தியில் ஆரம்பித்தது.

திருக்கோவில் மணிக்கூட்டு சந்தியை சென்றுபின்னர் விநாயகபுரம் பிரதானவீதியூடாக கோரைக்களப்பு சமாதிபிள்ளையார் ஆலயம் திருக்கோவில் சென்றடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X