2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழில் இளவரசி ஆன்

Mithuna   / 2024 ஜனவரி 11 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள  பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை (11) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்கு வானூர்தி  மூலம் வருகை தந்த இளவரசி, யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தில் தரையிறங்கிய போது, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்போது பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X