2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வடமாகாண மலர்க் கண்காட்சி...

George   / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு வடமாகாண சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க்கண்காட்சி, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டுப்பூங்கா) நேற்று வியாழக்கிழமை (05) பிற்பகல் 2 மணி முதல் ஆரம்பமாகியது.

இந்தக் கண்காட்சியை வடமாகாண அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா திறந்து வைத்தார்.

வடமாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களையும் சேர்ந்த தாவர உற்பத்தியாளர்கள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியில், நல்லின பழ மரக்கன்றுகள், நிழல் மரக்கன்றுகள், வெட்டுமரக்கன்றுகள், அலங்காரத் தாவரங்கள், பூ மரக்கன்றுகள் என்பன காட்சிப்படுத்தவுள்ளதுடன், விற்பனையும் இடம்பெறுகின்றன.

தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 7 மணிவரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சி தொடர்ந்து 3 தினங்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .