2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வாக்களிப்பு ஆரம்பம்...

Editorial   / 2025 மே 06 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் உள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில், 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு, இன்று (06) செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமானது. 

இந்தத் தேர்தலில், 17,256,338 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். 341 உள்ளூராட்சி மன்றங்களில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பே இன்று நடைபெறுகின்றது. அதில், 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் அடங்குகின்றன.

இந்த தேர்தலின் ஊடாக, வட்டார ரீதியில், 5052 உறுப்பினர்களும் மேலதிக பட்டியலின் ஊடாக 3235 பேருமாக மொத்தமாக 8287 உறுப்பினர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக, 75,589 பேர் களத்தில் குதித்துள்ளனர். 13,759 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

 

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மருதானை பஞ்சிகாவத்தை அபேசிங்கராமவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூ​ரிய கோட்டே மிரிஹான சமுர்த்தி கட்டிடத்தில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாச ராஜகிரிய, கொடுவேகொட விவேகாராம விகாரை, சந்திரலோக தஹம் பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

 

மன்னாரில்...

 எஸ்.ஆர்.லெம்பேட்

யாழ்ப்பாணத்தில்...

நிதர்சன் வினோத்

மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வாக்களித்தார்...

.சக்தி 

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வாக்களித்தார்

அ . அச்சுதன்

அம்பாறையில்...

வி.ரி. சகாதேவராஜா

தர்மலிங்கம் சித்தார்த்தன் வாக்களித்தார்...

பு.கஜிந்தன்

இலங்கைத் தமிழரசுக் கட்சின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாக்களித்தார்...

.சக்தி    

காத்தான்குடியில்...

எம் எஸ் எம் நூர்தீன்

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்சல்வி   வாக்களித்தார்...

ரஞ்சித் ராஜபக்ஷ

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி வாக்களித்தார்...

ரஞ்சித் ராஜபக்ஷ

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் வாக்களித்தார்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்  குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் வாக்களித்தார்.

அ . அச்சுதன்

அட்டாளைச்சேனையில்...

அபு அலா 

திருகோணமலையில்...

அ . அச்சுதன்

 

நீர்கொழும்பில்...

எம். இஸட். ஷாஜஹான்

மட்டக்களப்பு மாவட்டத்தில்… ரீ.எல்.ஜவ்பர்கான்  

பழனி திகாம்பரம் வாக்களித்தார்...

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் துணைத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்.  பழனி திகாம்பரம் வாக்களிக்கிறார்.

வி. ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்...

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் துணைத் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் .வீ. ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.

ரஞ்சித் ராஜபக்ஷ

வவுனியாவில்....

க. அகரன்

முல்லைத்தீவில்..

சண்முகம் தவசீலன்

ஆனந்தகுமார் வாக்களித்தார்...

கொழும்பு  மாநகர சபைக்கு, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் ஆனந்தகுமார் தனது வாக்கை அளித்துள்ளார்.

கே.ரீ.குருசாமி வாக்களித்தார்...

கொழும்பு மாநகர சபைக்கு சுயேச்சை குழுவில் ​போட்டியிடும் கே.ரீ. குருசாமி, குடும்பத்தாருடன் சென்று வாக்களித்தார். 

ஜீவன் தொண்டமான் வாக்களித்தார்...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாக்களித்தார்.

 செ .தி.பெருமாள்

நுவரெலியாவில்: ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X