2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'பாம்பின் தலைக்கு இலக்கு வைப்பு'

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தை இலக்கு வைத்துள்ளதாக, தென்னாபிரிக்க அணியின் தலைமை வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் குறிப்பிட்டுள்ளார்.

"பாம்பின் தலையை நீங்கள் வெட்டினால், உடம்பின் ஏனைய பகுதிகளும் வீழ்ந்துவிடும். கடந்த காலங்களில், அதை நாங்கள் செய்திருக்கிறோம். அணித்தலைவரை இலக்கு வைக்க நாங்கள் முயன்றிருக்கிறோம், ஏனெனில், அங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தினால், ஏனையோரையும் அது பாதிக்கும்" என்று, டேல் ஸ்டெய்ன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஸ்டெய்ன், "அவுஸ்திரேலியத் தலைவர்களே, துடுப்பாட்டத்தை முன்கொண்டு செல்கிறார்கள். றிக்கி பொன்டிங், மைக்கல் கிளார்க், பின்பு ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை, மிகச்சிறந்த தலைவரான ஸ்டீவ் வோ-இன் நிலையில் வைக்கலாம். அணித்தலைவரை நீங்கள் கைப்பற்றினார், ஏனைய வீரர்கள், அவர்களில் அதிகம் தங்கியிருப்பர். கப்பலை, அவரே வழிநடத்துகிறார். அவ்வாறான கப்பலில் நீங்கள் ஓட்டை இட்டால், அதை நீங்கள் மூழ்கடிக்கலாம். அது இலகுவானதன்று, ஆனால் அவ்வழியால் நீங்க மூழ்கவைக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டில், அப்போதைய தலைவரான றிக்கி பொன்டிங்கை இலகுவாக ஆட்டமிழக்க வைத்து, அத்தொடரை தென்னாபிரிக்க அணி வென்றிருந்தது. அதே போன்ற பாணியையே, டேல் ஸ்டெய்ன் முன்வைத்துள்ளார்.

இலங்கைக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த அவுஸ்திரேலிய அணி, அதன் பின்னர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை, 0-5 என்ற கணக்கிலும் இழந்திருந்தது. அவ்வாறான நிலையில், அவுஸ்திரேலிய அணி, சிறிதளவு பாதிக்கப்பட்டிருக்கும் எனவும் ஸ்டெய்ன் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .