Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 30 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது கிரிக்கெட் வாழ்வில், முதலாவது தொடர் நாயகன் விருதை வென்ற அமித் மிஷ்ரா, இத்தொடர் முழுவதிலும், விக்கெட்டுகளைக் கைப்பற்றவே முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.
இத்தொடரின் முதல் 4 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த நிலையில், தீர்மானமிக்க 5ஆவது போட்டியில், இந்திய அணி, அதிரடியான வெற்றியைப் பெற்றிருந்தது. இத்தொடரில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த மிஷ்ரா, தொடரின் நாயகனாகத் தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள மிஷ்ரா, "இந்தத் தொடரில், விக்கெட்டுகளைக் கைப்பற்றவே முயன்றேன். நிலைமைக்கேற்றவாறு பந்து வீசினேன். ஆனால், எனதுஎண்ணம், விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதாகவேஇருந்தது. ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முயன்றால், உங்களது பந்துவீச்சுக்கு அதிக ஓட்டங்கள் பெறப்படும். இறுதி (5ஆவது) போட்டியில், பந்துவீச்சாளர்கள், சிறப்பாகப் பந்துவீசினர்" என்றார்.
சிரேஷ்ட சுழற்பந்து வீச்சாளர்களான இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்ட இத்தொடரில், சிரேஷ்ட சுழற்பந்து வீச்சாளராகக் காணப்பட்ட மிஷ்ரா, சிரேஷ்ட வீரராக, தனது அனுபவங்களை, புதிய வீரர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு, தனது கருத்துகளை, அணித்தலைவர் மகேந்திரசிங் டோணியுடனும் பகிர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
சிரேஷ்ட வீரர்களில்லாது பெறப்பட்ட இந்தத் தொடர் வெற்றியை "முக்கியமான தொடர் வெற்றி" எனக் குறிப்பிட்ட மிஷ்ரா, இளைய வீரர்கள் காணப்படும் நிலையில், அவர்களின் மனோநிலையை உயர்ந்தளவில் பேணுவது அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.
5 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
13 Apr 2026