2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சென்னை அணிக்கு இரண்டாவது வெற்றி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வெற்றி பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது சென்னை சுபப்ர் கிங்ஸ் அணி.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டுவைன் ஸ்மித் 50(28 பந்துகள், 4 ஓட்டங்கள் 6 , 6 ஓட்டங்கள் 3) ஓட்டங்களையும், ரவீந்தர் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 36 (33 பந்துகள், 4 ஓட்டங்கள் 2) ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் ரஜாட் பாத்தியா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.5 ஓவர்களில்  சகல விக்கெட்களையும் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. இதில் 10 ஆம் இழக்க துடுப்பாட்ட வீரர் தவல் குல்கர்னி ஆட்டமிழக்காமல் 28(19 பந்துகள், 6 ஓட்டங்கள் 2) ஓட்டங்களையும், ரஜாட் பாத்தியா 23 (20 பந்துகள், 4 ஓட்டங்கள் 1, 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவீந்தர் ஜடேஜா 4 விக்கெட்களை கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக அவரே தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளைப் பெற்று சென்னை சுபப்ர் கிங்ஸ் அணி இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 2 புள்ளிகளைப் பெற்று ஐந்தாமிடத்தில் உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X