2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு முதல் வெற்றியும் தோல்வியும்

A.P.Mathan   / 2014 மே 04 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரிதிமன் சகா 47 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள், 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 59 ஓட்டங்களையும், கிளன் மக்ஸ்வெல் 27 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள், 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 45ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார், பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மா 39 ஓட்டங்களையும், கூறே அன்டர்சன் 25 பந்துகளில் 2ஆறு ஓட்டங்கள், 3நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 35 ஓட்டங்களையும், கெரோன் பொலார்ட் 12 பந்துகளில் 2ஆறு ஓட்டங்கள், 2நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரிஷி தவான், சந்தீப் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக கூறே அன்டர்சன் தெரிவானார்.

இந்த தொடரின் ஆறாவது போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்ற அதேவேளை முதல் ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி முதற் தோல்வியை சந்தித்துள்ளது.. இந்த தோல்வியின் மூலம் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி முதலிடத்தை இழந்துள்ளது. சென்னை சுபப்ர் கிங்ஸ் அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X