2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

எட்டாமிடத்திலிருந்து விடுபட்டது மும்பை இந்தியன்ஸ்

A.P.Mathan   / 2014 மே 07 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரோஹித் ஷர்மா 35 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், கெரொன் பொலார்ட் 43 ஓட்டங்களையும், சிதம்பரம் கெளதம் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் வருண் ஆரோன், யுஸ்வேந்தரா சலால், ஹர்ஷால் பட்டேல், அசோக் டின்டா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கிறிஸ் கெயில் 24 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 38 ஓட்டங்களையும்,  விராத் கோலி 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்பஜன் சிங், லசித் மாலிங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ரோஹித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் இரண்டாவது வெற்றியாகும்.இதன் மூலம் நான்கு புள்ளிகளைப் பெற்று ஆறாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வருட தொடர் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை காலமும் மும்பை இந்தியன்ஸ் அணி எட்டாமிடத்திலேயே இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. பெங்களூரு ரோயல் சலஞ்செர்ஸ் அணி 6 புள்ளிகளுடன் நான்கமிடத்திலுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .