2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

முதல் தெரிவுப் போட்டி இன்று

A.P.Mathan   / 2014 மே 27 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் தெரிவுப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த தொடரின் விதிப்படி முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் முதலாவது தெரிவுப்போட்டியில் மோதும். இதன்படி 14 போட்டிகளில் விளையாடி, 11 வெற்றிகளுடன்  22 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ள கிங்ஸ் 11 பஞ்சாப் அணி, 14 போட்டிகளில் விளையடி, 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ள கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும். தோல்வியடையும் அணி இரண்டாவது தெரிவுப் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் விளையாடும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும். 
 
இன்று நடைபெறும் போட்டி கொகொத்தா ஈடின் கார்டன் மைதனத்தில் நடைபெறவுள்ளது. கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 2008ஆம் ஆண்டு தொடருக்கு பின்னர் இந்த வருட தொடரிலேயே அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டிக்கு இன்னமும் தெரிவாகியதில்லை என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது. கொல்கொத்த நைட் ரைடேர்ஸ் அணி 2012ஆம் ஆண்டு சம்பியன் ஆகிய அதேவேளை 2011ஆம் ஆண்டு இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X