2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கு மீண்டும் முதலிடம்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுக்கமாக நடைபெற்ற அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி ஒன்றை பெற்று தொடரை வெள்ளையடிப்பு செய்து 3 இற்கு 0 என கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் அணி வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை வைத்திருந்த போதும், இறுதி ஓவரை வீசிய கிளன் மக்ஸ்வெல் ஓட்டம் எதனையும் வழங்காமல் 2 விக்கெட்களைக் கைப்பற்றி அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். 
 
அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஸ்டீபன் ஸ்மித் 77 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 56 ஓட்டங்களையும், ஜேம்ஸ் போக்னர் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சொஹைல் தன்வீர் 3 விக்கெட்களையும், சஹிட் அப்ரிடி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆஷட் சபிக் 50 ஓட்டங்களையும், சொஹைப் மக்சூட் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கேன் ரிச்சட்சன், கிளன் மக்ஸ்வெல், ஜேம்ஸ் போல்க்னர், சேவியர் டொஹர்ட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தரப்படுத்தல்களில் அவுஸ்திரேலியா அணி இழந்த முதலிடத்தை மீண்டும் பெற்றுள்ளது. கிளன் மக்ஸ்வெல் போட்டியின் நாயகனாகவும், ஸ்டீபன் ஸ்மித் தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .