2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

நடுவர்கள் பேசுவதை அனைவரும் கேட்கமுடியும்

A.P.Mathan   / 2014 நவம்பர் 12 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட் போட்டிகளின் போது மைதான நடுவர்கள், மூன்றாவது நடுவருடன் கலந்துரையாடும் விடயங்களை, தொலைக்காட்சி நேயர்கள் அறிந்து கொள்ளுமாறு ஒலிபரப்புமாறு சர்வதேசக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன் படி குறித்த நடவடிக்கையின் பரீட்சார்த்த ஒலி, ஒளிபரப்பு அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் ஆரபிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித்தொடரில் ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. 
 
அவுஸ்திரேலியா நேயர்கள் மட்டுமே இந்த ஒலி, ஒளிபரப்பை காண முடியும். அத்துடன் உலகக்கிண்ண தொடரின் சில போட்டிகளிலும் இந்த நடைமுறை செயற்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன் படி  நடுவர்கள் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுத்தனர் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்த கொள்ள முடியும் என சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இந்த தொடரின் ஐந்து போட்டிகளுக்கும் இங்கிலாந்தின் நைஜல் லோங் மற்றும் நியூசிலாந்தின் பில்லி பௌடன் ஆகியோர் கடமையாற்றவுள்ள அதேவேளை மூன்றாவது நடுவர்களாக அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் கடமையாற்றவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .