2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

2015இல் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர், 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 ஆண்டு வரையான 8 வருடத்திற்குள் இரு அணிகளும் 6 தொடர்களில் விளையாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் நடைபெற்ற சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில், நிபந்தனையின் அடிப்படையில் புதிய நிர்வாக மாற்றத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்தது. அந்த நிபந்தனையில் ஒன்று இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவேண்டும் என்பது. இதன்படி இந்த இரு அணிகளுக்குமான தொடர், வரும் வருடம் நடைபெற அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாகவும், 15 நாட்களுக்குள் பதில் கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .